பாடசாலைச் சிறுமியை கும்பலாக பலாத்காரம் செய்த நான்கு சிறுவர்கள்!!

509

பிரித்தானியாவில் பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு சிறுவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Workington, Cloffocks பகுதியிலே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவம் தொடர்பாக கும்ப்ரியா நகரத்தை சேர்ந்த 13 வயதுடைய மூன்று சிறுவர்களும், 14 வயதுடைய ஒரு சிறுவனும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 3ம் திகதி இரவு 7 மணிக்கு loffocks கார் பார்க் அருகே உள்ள புல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது, சிறுவர்களை கைது செய்துள்ள பொலிசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்த தகவலறிந்த பொதுமக்கள் உடனே தொடர்புக்கொள்ளும் படி பொலிசார் அறிவித்துள்ளனர்.