வெளியான உயர்தரப் பரீட்சையில் அதி சித்தி பெற்றவர்கள் விபரம்!!

1158

2016ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் வர்த்தக பிரிவில் நாடளாவிய ரீதியாக முதலாம் இடத்தை பெற்றிருப்பவர் கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் அகலங்க ராஜபக்ஸ என்ற மாணவராவார்.

புனித ஜோசப் வித்தியாலயத்தின் விந்துல பெரேரா அந்த பிரிவில் இரண்டாம் இடத்தையும், ஹிங்குராக்கொட ஆனந்த மகளீர் கல்லூரியின் நிபுனி ரூபசிங்க என்ற மாணவி மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதேவேளை உயர் தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் கிண்ணியா மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ரொஸானி அக்தார் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தை கல்முனை பாஃத்திமா வித்தியாலயத்தைச் சேர்ந்த கெலரின் டீலுஜன் என்ற மாணவர் பெற்றுள்ளார்.

நாடளாவிய ரீதியில் கலைப்பிரிவு முதலாம் இடத்தை கண்டி மகளீர் உயர் பாடசாலையின் இந்தீவரி கவரம்மன பெற்றுள்ளார். அப் பிரிவில் இரண்டாம் இடத்தை மானிப்பாய் இந்து கல்லூரியின் பீ.குருபரேஸன் பெற்றுக்கொண்டுள்ளார். மூன்றாம் இடத்தை கிரிபத்கொடை விஹாரமகாதேவி பாடசாலையின் ஏ.பாரமி என்ற மாணவி பெற்றுள்ளார்.

இதுதவிர உயர்தர பொறியியல் பிரிவில் சுன்னாகம் ஸ்கந்தவரோதய வித்தியாலயத்தின் மாணவன் ஜே.கனகசுந்தரம் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை மாத்தளை விஞ்ஞான கல்லூரியைச் சேர்ந்த நிஸல் கொப்பேகடுவை அடைந்துள்ளார். அந்தபிரிவில் மூன்றாம் இடத்தை கம்பஹா ரத்னாவலி மகளீர் கல்லூரியைச் சேர்ந்த ஏ.ரனதுங்க என்பவர் பெற்றுள்ளார்.