உரிமையாளர் இறுதிச்சடங்கில் கதறி அழுத குதிரை : நெஞ்சை உருக வைக்கும் புகைப்படங்கள்!!

588

பிரேசிலில் உரிமையாளர் இறுதிச்சடங்கில் அவரின் குதிரை கண்கலங்கிய சம்பவம் அங்கிருந்தவர்களை கலங்க செய்துள்ளது.

வாக்னர் டே லிமா பிகுயிரோடோ (34) என்ற நபர் செரினோ என்ற குதிரையை வளர்த்து வந்தார். அவர் தனது குதிரை மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 1ம் திகதி ஒரு விபத்தில் சிக்கி பிகுயிரோடோ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இவரது இறுதிச்சடங்கில் அனைவரும் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு வந்த குதிரை செரினோ உரிமையாளர் பிகுயிரோடோவின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதது.

இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அனைவரும் குதிரையின் பாசத்தை கண்டு கலங்கினர். அப்போது எடுக்கப்பட்ட உருக்கமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.