வவுனியா சகாயமாதபுரம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஜனாதிபதியின் இரண்டு வருட சேவைபூர்த்தியை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு!

578

வவுனியா சகாயமாதபுரம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் இலங்கை சனநாயக  சோஷலிச  குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இரண்டு வருட சேவைபூர்த்தியை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு இன்று(08.01.2017) காலை ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ சிவசங்கர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

ஆலய   நிர்வாக உறுப்பினர்கள்  மற்றும்  கிராம பொதுமக்களின்  பங்கு பற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில்  விசேட பூஜை  வழிபாட்டினை தொடர்ந்து   ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள்  நாட்டபட்டது.

படங்கள் :சிவசங்கர்