வவுனியாவில் நடைபாதையில் தொலைபேசி சிம் அட்டை விற்பனைக்குத் தடை!!

1195

 
வவுனியா மத்திய பேரூந்து கட்டடத் தொகுதியில் நடைபாதையிலிருந்து தொலைபேசிக்கு பயன்படுத்தப்படும் சிம் அட்டையினை விற்பனை செய்து வருகின்றனர்.

சிம் அட்டையை விற்பனை செய்பவர்கள் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள எத்தனித்து வருவதை அவதானித்த அப்பகுதியில் விற்பனை நிலையத்தினை நடாத்திவரும் உரிமையாளர்கள் இது தொடர்பாக பொலிசாரின் அவசர தொலைபேசி அழைப்புக்கு முறைப்பாடு மேற்கொண்டதுடன் வவுனியா நகரசபை செயலாளரிடமும் முறையிட்டதையடுத்து இன்று காலை அப்பகுதிக்குச் சென்ற பொலிசார், நகரசபை உத்தியோகத்தர்கள் பேரூந்து நிலைய கட்டடத் தொகுதியிலுள்ள நடைபாதையில் இன்று முதல் தொலைபேசி சிம் அட்டையினை விற்பனை செய்வதற்கு தடைவிதித்ததுடன்,

பொலிசார் தொலைபேசி சிம் அட்டை விற்பனை செய்த சில இளைஞர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளர் திரு.ஆர் தயாபரனிடம் தொடர்பு கொண்டபோது, நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வது வவுனியா நகரில் முற்றாக தடை செய்துள்ளதாகவும் குறிப்பாக பேரூந்து நிலைய கட்டடத் தொகுதியிலிருந்து பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளும் நடைபாதையில் தொலைபேசி சிம் அட்டையினை விற்பனை செய்து வருவது இன்றிலிருந்து முற்றாகத் தடை செய்துள்ளதாகவும் மீறி செயற்படுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற மேலும் தெரிவித்தார்.