வவுனியா குருமன்காட்டுச்சந்தியில் மஞ்சள் கோட்டில் சிறுவனை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கிள்!!

520

 
வவுனியா குருமன்காட்டுச்சந்தியில் காணப்படும் மஞ்சள் கோட்டில் இன்று (16.01.2017) மாலை 5.50 மணியளவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

குருமன்காட்டுச்சந்தியில் காணப்படும் மஞ்சள் கடவையினை சிறுனொருவன் கடக்க முற்ப்பட்ட சமயத்தில் வவுனியாவிலிருந்து மன்னார் வீதியுடாக பயணித்த மோட்டார் சைக்கிள் இச் சிறுவனை மோதித்தள்ளியது. இவ்விபத்தில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.