துருக்கியின் சரக்கு விமானம் விபத்திற்குள்ளானதில் 32 பேர் உயிரிழப்பு!!

1437

துருக்கியின் சரக்கு விமானம் ஒன்று கிர்கிஸ்தானின் மனாஸ் விமான நிலையத்திற்கு அருகில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்

ஹொங்கொங்கில் இருந்து துருக்கி நோக்கி பயணித்த புபோயிங் 747 என்ற விமானமே விபத்திற்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது

மீட்புப்பணியாளர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விமானத்தை செலுத்திய விமானி உள்ளிட்ட 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

விமானம் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் பல கட்டடங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் விபத்தில் உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனாஸ் விமானநிலையத்தில் தரையிறக்கப்படவிருத்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை.