மெரினா போராட்டத்தில் பங்கேற்ற ஒரே முன்னணி நடிகை இவர்தான்!!

459

சென்னை மெரினாவில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களில் நடிகை நயன்தாரா பங்கேற்றுள்ளார். நடிகைகளில் இவர் மட்டுமே பங்கேற்றது சிறப்பு.

மெரினாவில் நடைபெறும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் நடிகர் லோரன்ஸ், ஆர்.ஜே.பாலாஜி போன்றோர் முழு மூச்சாக களப் பணியாற்றி வருகிறார்கள். முன்னணி நடிகர் விஜய் தனது முகத்தை மூடியபடியே மெரினா சென்று போராட்ட களத்தில் கால் பதித்து திரும்பினார்.

நடிகைகளை பொறுத்தளவில், முன்னணி நடிகையான நயன்தாரா மெரினா சென்று இளைஞர்கள் போராட்டத்தை நேரில் கண்டார். இவர் ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு இருப்பதாக அறிக்கை வெளியிட்டார் என்பது நினைவிருக்கலாம்.