இலங்கை வரலாற்றில் முஸ்லிம் சிறுவன் ஒருவர் முதன்முறையாக பௌத்த பிக்குவானார்!!

480

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக முஸ்லிம் சிறுவன் ஒருவர் பௌத்த பிக்குவாக மாறியுள்ளார்.

இந்த நிகழ்வு, திம்புலாகல வன மடாலயத்தில் இடம்பெற்றுள்ளதாக மடாலயத்தின் தலைமைக்குரு தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுவனின் தாயார் வெளிநாடு சென்றுள்ளநிலையில் தந்தையாரான ஹமீட் இஸ்மாயில் என்பவர் சிறுவனை மடாலயத்தில் சேர்த்ததாக தலைமை பௌத்த பிக்கு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மடாலயத்தில் சிங்கள, தமிழ் மற்றும் வேடுவ இனத்தை சேர்ந்தவர்கள் பௌத்த மதத்தை தழுவியுள்ளனர்.