வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்!!

757

 
நேற்றைய தினம் (23.01.2017) தமக்கு நீதி வேண்டி சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உணவு, நீர் எதுவுமின்றியும், கொட்டும் மழையிலும், இரவு வேளையில் கடும் குளிர், காரிருளில் தமது போராட்டத்தை இன்றைய தினம் (24.01.2017) இரண்டாவது நாளாக தொடர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.

இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.