சினிமா பாணியில் கொள்ளையில் ஈடுபட்ட பெண் அறிவிப்பாளர்!!

528

கிரிபத்கொட பிரதேசத்தில் கத்தி முனையில் கொள்ளையில் பெண்ணொருவர் ஈடுபட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள அழகு கலை நிலையத்திற்கு முடி அலங்காரம் செய்துக் செய்யவென பெண்ணொருவர் சென்றுள்ளார். எனினும் அங்கிருந்த பெண் ஊழியரின் கழுத்தில் கத்தியை வைத்து மரண அச்சுறுத்தல் விடுத்து, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்யையடித்து பெண் தப்பி சென்றுள்ளார்.

இந்த பெண் ஒரு மாதங்களுக்கு முன்னர் இன்னுமொரு ஆணுடன் இணைந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த பெண் கடந்த 23ஆம் மோதரையில அமைந்து அவரது வீட்டில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆண் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதுடைய குறித்த பெண் இரண்டு பிள்ளைகளின் தாயாராகும். போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகியுள்ள குறித்த பெண்ணுக்கு நாள் ஒன்றுக்கு 10 பக்கட் ஹேரொயின் தேவைப்படுவதாக பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர்.

இதற்கு அவசியமான பணம் கண்டுபிடிப்பதற்காக அவர் இன்னும் ஒரு நபருடன் இணைந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த பெண் பிரபல ஊடகமொன்றின் முன்னாள் அறிவிப்பாளர் என தெரியவந்துள்ளது.