வவுனியா மனித உரிமை செயலகத்திற்குச் சென்று காணாமல்போனோர் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்த இளைஞர்கள்!!

650

 
உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக 40 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து இலங்கை மனித உரிமை செயலகத்திற்குச் சென்று அங்குள்ள அதிகாரியிடத்தில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது உறவுகள் காணாமற்போயுள்ளதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டின் விசாரணைகள் எந்தக்கட்டத்தில் உள்ளது, கடந்த 8 வருடங்களாக அவர்களுக்கான பதில் வழங்கப்படவில்லை வவுனியாவில் எத்தனை பேர் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது?,

அவர்களின் விபரங்களை உங்களிடம் உள்ளதா? எத்தனை முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள விடயங்கள் உங்களின் மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதா? போன்ற விடயங்களைக் கேட்டபோதும் அதிகாரிகள் மேலதிகாரியிடம் தொடர்பு கொண்ட பின்னர் தெரிவிப்பதாகவும் விபரங்களைப் பெறுவதற்கு ஒரு நாள் காத்திருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.