ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நடிகர் சிம்பு காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதாக கூறி பொலிசார் சிலரை கைது செய்துள்ளனர்.
போராட்டக்களத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் கலவரத்தில் ஈடுப்படவில்லை என்றும், போராட்டத்தை திசை திருப்பவே இவ்வாறு தகவல்கள் பரப்பப்பட்டு கைது நடந்ததாக சிம்பு குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், மாணவர்களுக்கு அடைக்கலம் அளித்த மீனவர்கள் மீது பொலிசார் தாக்குதல் நடத்தியதும், கைது நடவடிக்கை மேற்கொண்டதும் கண்டிக்கத்தக்கது.
போராட்டத்தில் ஈடுப்பட்ட காரணத்திற்காக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தால், இப்பிரச்சனைக்கு நிரந்திர தீர்வு வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்ற தன்னையும் பொலிசார் கைது செய்ய வேண்டும் என சிம்பு கூறியுள்ளார்.
மேலும், போராட்டக்களத்தில் குறிப்பிட்ட ஒரு மதத்தினரை கொச்சைப்படுத்தும் விதத்தில் சில பிரபலங்கள் கருத்து தெரிவித்தது கண்டிக்கத்தக்கது.
தற்போது வரை சிலரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதற்கான காரணம் மர்மமாக இருப்பதாக சிம்பு காவல் துறை மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் தான் மீண்டும் போராட்டத்தில் ஈடுப்படுவேன் என நடிகர் சிம்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.






