எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சமாட்டேன் : விஜயகாந்த்!!

533

vijayakanth

எத்தனை வழக்குகள் போட்டாலும் அதற்கு நான் அஞ்சமாட்டேன் என்று தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜரான தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்‌த் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2012ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம், தே.மு.தி.க. நலத்திட்ட உதவிகள் வழங்குவது மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக குப்புசாமி என்பவர் அதே ஆண்டு டிசம்பரில் தஞ்சை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்தவழக்கி்ற்காக நேரில் ஆஜராகுமாறு விஜயகாந்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதில் 7 முறை முன் ஜாமீன் பெற்றார். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் விஜயகாந்த்திற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால். இன்று காலை ஆஜரானார்.



அப்போது நீதிமன்ற வாசலில் காரை விட்டு இறங்கியதும் உற்சாகத்துடன் தொண்டர்களை பார்த்து இரு கைகளை மே‌லே தூக்கி, பெரிய கும்பிடு‌ போட்டார். பின்பு வழக்கினை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சேதுமாதவன், வரும் நவம்பர் 28ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த விஜயகாந்த் ‌செய்தியாளர்களிடம் பேசுகையில் என்மீதும் எனது கட்சியினர் மீதும் இதுவரை 50 முதல் 60 அவதூறு வழக்குகள் தொடுத்துள்ளனர்.அத்த‌னையும் பொய் வழக்குகள்.

இதன் மூலம் ‌எனக்கு மக்களிடம் நல்ல செல்வாக்கினை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. வழக்குகளை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன். இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்றும் தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.