பல நாட்களாக செய்துவந்த காரியம் : வசமாக மாட்டிய 19 வயது இளைஞன்!!

764

பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் சீதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனை நேற்றைய தினம் நீர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 19 வயதுடைய இளைஞர் என்றும், குறித்த நபரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ள பல பொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சீதுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் உதம்மிட பிரதேசத்தினை சேர்ந்தவர் என்றும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்