யாழ். குப்பிளானில் பின்புறமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த வயோதிபப் பெண் சிகிச்சை பலனின்றி இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 05ம் திகதி பிற்பகல் 06.30 மணியளவில் யாழ். குப்பிளான் சந்திக்கருகாமையில் மோட்டார்ச் சைக்கிளில் வேகமாக வந்த நபரொருவர் வீதியின் ஓரமாக வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த வயோதிபப் பெண்மணியை மோதியிருந்தார்.
குறித்த வயோதிபப் பெண்மணி பின்தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிபப் பெண்மணியின் நிலைமை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாள் முதல் கவலைக்கிடமாகியிருந்த நிலையிலேயே இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






