பாடசாலை மாணவன் துஷ்பிரயோகம் : உயர்தரப் பிரிவு மாணவர்கள் மூவர் நீக்கம்!!

799

கினி­கத்­தேனை பிர­தே­சத்தில் வகுப்­பறை ஒன்­றினுள் வைத்து மாணவர் ஒரு­வரை துஷ்­பி­ர­யோகம் செய்த குற்­றச்­சாட்டில் அப்­பா­ட­சா­லையின் உயர்­தரப் பிரிவில் கல்வி பயின்று வந்த மாண­வர்கள் மூவர் பாட­சா­லை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இப்­பா­ட­சா­லையின் 10 ஆம் தரத்தில் கல்வி கற்­று­வரும் மாணவர் படை­ய­ணியை சேர்ந்த மாணவர் ஒரு­வரை பாட­சா­லையில் உள்ள அறை ஒன்­றினுள் வைத்து பாலியல் ரீதி­யாக துஷ்­பி­ர­யோகம் செய்­தனர் என குறித்த மாணர்கள் மூவரும் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளனர்.

இம்­மா­ண­வர்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டு தொடர்பில் பாட­சாலை ஒழுக்­காற்று குழு மட்­டத்தில் விசா­ர­ணைகள் இடம்­பெற்­றுள்­ளன.

அதன்­போது எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­துக்­க­மைய மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக இவ்­வி­டயம் தொடர்பில் கினி­கத்­தேனை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு அறி­வித்­துள்­ள­தாக அப்­பா­ட­சா­லையின் அதிபர் தெரி­வித்­துள்ளார்.

இச்­சம்­ப­வத்­துடன் மேலும் மாண­வர்கள் எவ­ரா­வது தொடர்புப்பட்டுள்ளனரா என கண்டறியும் பொருட்டு பாடசாலை ஒழுக்காற்று குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.