கொழும்பு கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள அமெரிக்காவுக்கான இலங்கை தூதரக அலுவலகத்தின் பாதுகாப்பு சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் கடுமையாக விதிக்கப்படவுள்ளதாக அந்த தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க விசாவுக்கான நேர்முக தேர்விற்காக வருபவர்கள் அந்த சட்ட நெறிகளை ஆய்வு செய்து அதற்கமைய வருகைத்தருமாறு தூதுதரகம் அறிவித்துள்ளது. அந்த சட்டத்தை மீறும் நபர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கையடக்க தொலைப்பேசி, டிஜிட்டல் நாட்குறிப்பு, டிஜிட்டல் கடிகாரங்கள், கமரா, ஆடியோ / வீடியோ கேசட்டுகள், குறுவட்டு, எம்பீ 3 இயந்திரங்கள், மடிக்கணினிகள், மின்னணு அல்லது பேட்டரிகள் கொண்ட பொருட்களுடன் ஒருவரும் உள்ளே அனுமதிப்படுவதில்லை என தூதரகம் தெரிவித்துள்ளது.
உணவு மற்றும் குடிநீர், வாசனை திரவியங்கள், சீல் வைக்கப்பட்ட கடித உறைகள், தீயை ஏற்படுத்தும் சிறிய பொருட்கள், கத்தரிக்கோல், மடக்கும் போது 40 சென்றீ மீற்றரை விட அதிக நீளமான குடிகளை ஆகியவற்றை உள்ளே கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.






