மனோராமா மரணத்தில் புதிய சர்ச்சை : திடுக்கிடும் தகவல்கள்!!

579

ஆச்சி மனோராமாவை யாராலும் மறக்க முடியாது. அவரது நடிப்பையும் தாண்டி அனைவரையும் சிரிக்க வைத்து மகிழவைத்தார். குழந்தைகளுக்கும் இவரது நடிப்பு பிடித்து போகும்.

மிகவும் கஷ்டப்பட்டு சினிமாதுறைக்குள் வந்து தனக்கென ஒரு அரியாசனத்தை தக்க வைத்து சிறப்பு பெற்றவர். அனைவரும் இவரை ஆச்சிமா என்றே கூப்பிடும் அளவுக்கு தன்னுடன் பணியாற்றிய அனைவருடனும் வயது வேற்றுமை பாராமல் மதிப்பு கொடுத்தவர்.

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சில வருடங்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் அது பலனளிக்காமல் கடந்த அக்டோபர் 2015ல் காலமானார்.

இந்நிலையில் அவர் 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது மிரட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது, இதன் பின் தான் அவரின் உடல் நிலை மோசமாகப்போனது என்றும் சொல்கிறார்கள்.

ஏற்கனவே கங்கை அமரன் தன்னுடைய பையனூர் பங்களாவை சசிகலா கும்பல் ஜெயலலிதாவின் பெயரை சொல்லி மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டார்கள் என கூறிய வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலாக பரவியது.

மேலும் பல முக்கிய தயாரிப்பாளர்களையும் மிரட்டி படங்களை மிக சொற்பமான விலையில் தங்கள் வசம் வாங்கிக்கொண்டதாக சொல்லப்படுகிறது.