சந்திமாலுக்கு மீண்டும் ஏமாற்றம் : இளம் வீரருக்கு தலைவர் பதவி!!

463

இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான விளையாடவுள்ள இலங்கை ஏ அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து ஏ அணி இலங்கை ஏ அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டு அடுத்த 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அணி வீரர்களின் பெயர் நேற்று வெளியிடப்பட்டது.

அந்தவகையில் இலங்கை அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்தவகையில் அறிவிக்கப்பட்ட வீரர்கள் வருமாறு,

தனஞ்சய டி சில்வா, திமுத் கருணாரத்ன, உத்தர ஜயசுந்தர, சாந்தன் வீரக்கொடி, சரித அசலாங்க, ரோஷன் சில்வா, லஹிரு கமகே, ராஜித, ரொன் சந்திரகுப்த, மதுசங்க,அசுத்த பெர்னாண்டோ, டில்ருவன் பெரேரா, அமில அபோன்ஸா, வாண்டர்சே, புஷ்பகுமார ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இலங்கை ஏ அணியில் சந்திமால் தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை அணி மீதான பார்வையை அதிகரித்துள்ளது.