வவுனியா செட்டிகுளம் ம.வி மாணவர்கள் கேப்பாப்பிலவு போராட்டத்திற்கு ஆதரவாக கவனயீர்ப்பு!!

405

 
வவுனியாவில் இன்று (20.02.2017) காலை 8 மணி தொடக்கம் 9 மணிவரை செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவினை தெரிவித்து தமது பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இன்று வடக்கின் பெரும்பாலான பாடசாலை மாணவர்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.