நீதிமன்றத்தில் ஆவேசப்பட்ட விஜயகாந்த்!!

478

Vijayakanthஜெயலலிதா குறித்த அவதூறு வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜாரானார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 13ம் திகதி கேப்டன் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர் பத்திரிகைகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா விளம்பரங்கள் கொடுத்து மக்கள் வரிப்பணத்தை கோடிக் கணக்கில் நாசம் செய்கிறார் என்று கூறி இருந்தார்.

இதையடுத்து விஜயகாந்த் மீது முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி விஜயகாந்துக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் நேரில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது நீதிமன்றம் உள்ளே சென்ற விஜயகாந்த் தொண்டர்களை பார்த்து கும்பிடுவது மாதிரி இரு கைகளையும் தலைக்கு மேலே குவித்து இரண்டு முறை கும்பிடு போட்டிருக்கிறார்.

பின்பு நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தபோது கூட்டம் முண்டியடுத்தது. இதில் ஆவேசப்பட்ட விஜயகாந்த் நாக்கை துருத்தி கையை ஓங்கி ஆவேசத்தை காட்டியுள்ளார்.



முன்னதாக விஜயகாந்துடன் தேமுதிக மகளிர் அணியினரும் நீதிமன்றத்திள்குள் நுழைந்தனர். பொலிசார் அவர்களை தடுத்து அனுமதி சீட்டு இருந்தால்தான் இங்கே நிற்க முடியும் என்று கூற எங்களிடம் இருக்கிறதே என்று அனுமதி சீட்டை தலைக்கு மேலே உயர்த்தி காட்டியுள்ளார்கள்.