இலங்கை தேசிய கீத சர்ச்சை தொடர்பில் ஐசிசி கவலை

734

Print

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப நிகழ்வின் போது இலங்கை தேசிய கொடி எடுத்துச் செல்லும்போது ஏற்பட்ட தவறிட்கு, சர்வதேச கிரிக்கெட் சபை கவலை வெளியிட்டுள்ளது.

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப நிகழ்வின் போது இலங்கை தேசிய கொடி எடுத்துச் செல்லும்போது நாட்டின் தேசிய கீதத்திற்கு பதிலாக ஹிந்தி பாடல் ஒன்று ஒலிபரப்பப்பட்டது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்பட்டுத்தியுள்ள நிலையில் இது தவறுதலாக நடந்த விபத்து ஒன்று என சர்வதேச கிரிக்கெட் சபை கவலை வெளியிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஐசிசி பணிப்பாளர் கிரிஸ் ரெடிலி எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் உரிய அதிகாரிகளிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.