வவுனியா தேக்கவத்தையில் வீடு முற்றாக எரிந்து நாசம்!!

230

 
இன்று(23.02.2017) மதியம் சுமார் 1.45 மணியளவில் தேக்கத்தைப் பகுதியில் வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

வீட்டில் யாருமற்ற வேளையில் திடீரென சமயலறையில் தீ விபத்தோன்று ஏற்ப்பட்டுள்ளது. இதனை பார்வையுற்ற அயலவர்கள் உடனே தண்ணீருற்றி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

எனினும் இத் தீ விபத்து காரணமாக குளிர்ச்சாதனப்பெட்டி, அரைக்கும் இயந்திரம் என சமயலறையிலிருந்த அனைத்து பொருட்களுக்கு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

எனினும் இத் தீ விபத்து எரிவாயு ஒழுக்கின் காரணமாக இடம்பெற்றதா அல்லது மின்னொழுக்கு காரணமாக இடம்பெற்றதா என வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.