தேள்கள், சிலந்­திகள், வண்­டு­களை சமைத்து உட்­கொண்ட ஹொலிவூட் நடிகை ஏஞ்­ச­லினா ஜோலி!!

626

 
ஹொலிவூட் நடிகை ஏஞ்­ச­லினா ஜோலி, தேள்கள், சிலந்­திகள் மற்றும் வண்­டு­களை சமைத்து உட்­கொண்­டுள்ளார். 41 வய­தான ஏஞ்­ச­லினா ஜோலி, ஹொலி­வூட்டின் முன்­னிலை நடி­கை­களில் ஒரு­வ­ராக விளங்­கு­கிறார்.

ஏஞ்­ச­லினா ஜோலி இயக்­கிய, First They Killed My Father (முதலில் அவர்கள் எனது தந்­தையைக் கொன்­றார்கள்) எனும் திரைப்­ப­டத்தின் வெளி­யீட்டு விழா கடந்த சனிக்­கி­ழமை கம்­போ­டி­யாவில் நடை­பெற்­றது. இதற்­காக தனது பிள்­ளை­க­ளுடன் கம்­போ­டி­யா­வுக்குச் சென்ற ஏஞ்­ச­லினா ஜோலி, படக்­கு­ழு­வி­ன­ருக்கு தானே உணவு சமைத்துப் பரி­மா­று­வ­தற்குத் தீர்­மா­னித்தார்.

இதன்­போது, சிலந்­திகள், தேள்கள் மற்றும் வண்­டு­களை ஏஞ்­ச­லினா ஜோலி பொரித்து உட்­கொண்­ட­துடன் அவற்றை தனது பிள்­ளை­க­ளுக்கும் பரி­மா­றினார். பி­சி­யிடம் இது தொடர்­பாக கருத்துத் தெரி­வித்த ஏஞ்­ச­லினா ஜோலி, “இவை இங்கு (கம்­போ­டி­யாவில்) எப்­போதும் உணவின் ஒரு பகு­தி­யாக உள்­ளன என எண்­ணு­கிறேன்.

அதே­வேளை, யுத்த காலத்தில் தப்பிப் பிழைப்­ப­தற்­கான ஒரு வழி­யா­கவும் இது உள்­ளது. மக்கள் பட்­டி­னியால் வாடும் நிலையில், இத்­த­கைய உண­வுகள் மூலம் அவர்கள் உயிர் பிழைக்­கலாம் எனக் கரு­து­கிறேன்’ எனத் தெரி­வித்தார்.

நடிகர் பிரட் பிட்டை திரு­மணம் செய்த ஏஞ்­சலி ஜோலி 3 பிள்­ளைளைப் பெற்றார். இவர்கள் தவிர மேலும் 3 பிள்­ளை­களைத் தத்­தெ­டுத்தார். அண்­மையில் பிரட் பிட்டும் ஏஞ்­ச­லி­னாவும் பிரிந்­தனர். பிள்­ளை­களை வளர்க்கும் உரி­மையை ஏஞ்­ச­லினா தக்க வைத்­துக்­கொண்டார்.

கம்­போ­டி­யாவில் பிறந்த அமெ­ரிக்க மனித உரிமை செயற்­பாட்­டா­ள­ரான லோங் உங் எனும் பெண் எழு­திய நாவ­லையே ஏஞ்­ச­லினா ஜோலி திரைப்படமாக இயக்கியுள்ளார். இத் திரைப்பட வெளியீட்டு விழாவில் கம்போடிய மன்னர் நோரோடொம் சிஹாமொனியும் கலந்துகொண்டார்.