காணாமல் போன குடும்பஸ்தர் கிணற்றில் சடலமாக மீட்பு!!

866

காணாமல் போனதாக கூறப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் 5.30 மணியளவில் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு வாகரைப் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட அம்பந்தாம்வெளி கிராம அபிவிருத்திச் சங்க செயலராகிய விநாயகமூர்த்தி பிரேமகாந்த (வயது (29) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக வாகரைப் பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர் காணாமல் போயிருந்தாக தெரிவித்து உயிரிழந்தவரின் பெற்றோர்களினால் வாகரைப் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தாக தெரியவருகின்றது.

காணாமல்போய் சுமார் ஆறு நாட்கள் கடந்த நிலையில் உயிரிழந்தவரின் வீட்டில் இருந்து சுமார் 800 மீற்றருக்கு அப்பால் உள்ள பாழடைந்த கிணற்றில் குறித்த சடலம் கிடப்பதை அறிந்து உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்திய நிலையில் பொலிசார் குறித்த இடத்திற்கு வருகைதந்து மேலதிக விசாரணையை மேற்கொண்டனர்.