அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கடந்த 30 வருடங்களாக செல்பீ படம்பிடித்து வந்துள்ளார்.
கார்ல் பெடேன் எனும் இவர், செல்பீ எனும் வார்த்தை பயன்பாட்டுக்கு வருவதற்கு வெகு காலத்துக்கு முன்னரே தன்னைத் தானே படம்பிடிக்க ஆரம்பித்தாராம்.
போஸ்டன் கல்லூரியில் பேராசிரியாகப் பணியாற்றும் இவர், 1987 ஆம் ஆண்டிலிருந்து தினமும் ஒரு செல்பீ படமாவது பிடித்துக்கொண்டாராம்.
பல்வேறு இடங்களில் ஏறத்தாழ ஒரே பின்னணி. ஒளியமைப்புடன் இவர் செல்பீ படம் பிடித்து வந்தார். இதுவரை சுமார் 11,000 செல்பீ படங்களைப் பிடித்துக் கொண்டுள்ளார்.
தனது இத்திட்டத்துக்கு எவ்ரிடே செல்பீ ப்ரஜெக்ட் என இவர் பெயரிட்டுள்ளார்.
நேற்றுடன் இந்த செல்பீ திட்டத்துக்கு 30 வருடங்கள் பூர்த்தியாகின. இனியும் இந்நடவடிக்கையை தொடரவுள்ளதாக கார்ல் பெடேன் கூறுகிறார்.