கங்குலிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!!

520

Ganguly

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலி மற்றும் டென்னிஸ் வீரர் பயசுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.

மேற்குவங்க விளையாட்டு வீரர்களுக்கு அம்மாநில அரசு விருது வழங்கி கௌரவிக்க முடிவு செய்துள்ளது. இதில் கொல்கத்தாவின் செல்லப் பிள்ளையான முன்னாள் இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலி, சமீபத்தில் யு.எஸ்., ஓபன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தாவில் பிறந்த பயசுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களை தவிர 50க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. இது குறித்து கங்குலி கூறுகையில், என் வாழ்க்கையில் இதனை மகத்தான சாதனையாக கருதுகிறேன். இந்திய டென்னிஸ் வீரர் பயசை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்.

வயது என்பது ஒரு எண் மட்டும் தான் என்றும் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கும் படி அவருக்கு ஆலோசனை வழங்குவேன் எனவும் கூறினார்