வவுனியா சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற தேர்தல் நேற்று 27.02.2017 திங்கட்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் பிரதம தேர்தல் அதிகாரியான அதிபர் எஸ்.சசிகுமார் தலைமையில் இடம்பெற்றது.
மாணவர்களின் உற்சாகமான வாக்களிப்பு மத்தியில் இடம்பெற்ற தேர்தலில் தெரிவு செய்யபட்ட மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்றைய தினம் 28.02.2017 இடம்பெறுகின்றது.