டுவிட்டரில் கோரிக்கை விடுத்த பெண்ணுக்கு பிரதமர் மோடி கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

638

தமி­ழ­கத்தின் கோவை ஈஷா மையத்தில் அண்­மையில் நடை­பெற்ற நிகழ்வில் இந்­திய பிர­தமர் மோடி அணிந்­திருந்த சால்­வையை தருமாறு டுவிட்­டரில் பெண்­ணொ­ருவர் கோரிக்கை விடுத்­ததன் பேரில் பிர­தமர் அவ­ருக்கு பரி­சாக அளித்­துள்ளார்.

கோவை வெள்­ளி­யங்­கிரி மலைப்­ப­கு­தியில் ‌அமைக்­கப்­ப‌ட்­டுள்ள 112 அடி உயர ஆதி­யோகி சிவன் சிலையை பிர­தமர் மோடி நரேந்திர மோடி கடந்த 24 ஆம் திகதி திறந்து வைத்­துள்ளார்.

அதன் பின்னர் ஈஷா யோகா மையத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு அவர் பேசி­யுள்ளார். குறித்த விழாவில் கலந்­து­கொண்ட பிர­தமர் மோடிக்கு ஆதி­யோகி படம் இடம்­பெற்ற சால்வை ஒன்­றினை ஈஷா யோகா மையத்தின் நிறு­வுனர் ஜக்கி வாசுதேவ் அளித்­துள்ளார்.

விழா முழு­வதும் பிர­தமர் மோடி அந்த சால்­வையை அணிந்­தி­ருந்தார். அந்த சால்­வையை தனக்கு தரு­மாறு பிர­தமர் மோடி­யிடம், டுவிட்டர் மூலம் டில்­லியைச் சேர்ந்த ஷில்பி திவாரி என்ற பெண்­ணொ­ருவர் கேட்­டி­ருந்தார். இதை­ய­றிந்த பிர­தமர் மோடி, சால்­வை­யுடன், தனது கையெ­ழுத்­திட்ட கடி­தத்­தி­னையும் ஷில்பி திவா­ரிக்கு அனுப்­பி­யுள்ளார்.

இந்­நி­லையில் பிர­தமர் அனுப்­பிய சால்வை மற்றும் கடி­தத்தின் புகைப்­ப­டங்­களை ஷில்பி திவாரி தனது டுவிட்­டரில் பதி­விட்­டுள்­ள­துடன், தமது கோரிக்­கைக்கு செவி­சாய்த்து பிர­தமர் மோடி, சால்வையை பரிசாக வழங்கியது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.