பேஸ்புக்கால் நடந்த கொடூர கொலை!!

610

facebook-murder

தமிழ்நாட்டில் நடைபெற்ற பேஸ்புக் காதலால் நடந்துள்ள கொடூர கொலையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் தேனுகாம்பாள் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் மற்றும் பாலா தம்பதியினர்,

இவர்களது மகள் சதுர்ஷினி(19), பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.கொம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மகன் யுஜேஷ்குமார்(11) சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பாலா, வீட்டின் ஹாலில் மகன் யுஜேஷ்குமாரும், படுக்கை அறையில் மகள் சதுர்ஷினியும் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், சதுர்ஷினியையும், அவரது தம்பியையும் அவரது காதலன் முகேஷ்(24) கொலை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று தனிப்படை பொலிசார் முகேசை கைது செய்தனர்.
அவரிடம் தனிப்படை பொலிசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.

மேடவாக்கம், ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த முகேஷ், பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் எம்.எஸ்.சி. கேட்டரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

அவருடைய தந்தை உன்னிகிருஷ்ணன் கடை நடத்தி வருகிறார். தம்பி ஹரிஷ், சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். முகேஷின் தம்பி ஹரிஷ், கிழக்கு தாம்பரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படிக்கும்போது சதுர்ஷினி அவருடன் படித்து வந்தார். தம்பியை பள்ளியில் விட வரும் முகேஷ் சதுர்ஷினியுடன் நெருங்கி பழகி உள்ளார்.

பேஸ்புக்கில் இருவரும் அடிக்கடி கருத்துக்களை பரிமாறிக்கொண்டிருந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பிளஸ்-2 படித்து முடித்ததும் சதுர்ஷினி, பல்லாவரத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் சேர்ந்தார். அதே கல்லூரியில் முகேஷ், எம்.எஸ்.சி. கேட்டரிங் மாலை நேர வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார்.

தீவிரமாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். கடந்த யூலை மாதம் 18ம் திகதி சதுர்ஷினி வீட்டை விட்டு வெளியேறி முகேசை ராயபுரத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து சேலையூர் பொலிசில் சதுர்ஷினியின் பெற்றோர் புகார் செய்தனர். திருமணம் முடித்து பொலிஸ் நிலையம் வந்த சதுர்ஷினி, காதல் கணவருடன் செல்வதாக கூறினார்.

சதுர்ஷினி மேஜராக இருந்ததால் அவரின் முடிவின்படி காதல் கணவருடன் செல்ல பொலிசார் அனுமதித்தனர். இந்நிலையில் காதலனுடன் சென்ற சதுர்ஷினியின் மனதைக் கரைத்த பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச்சென்று விட்டனர்.

அதன் பின்னர் முகேசை சந்திக்க சதுர்ஷினி மறுத்து விட்டார். தாய் வீட்டில் இருந்தே கல்லூரிக்கு சென்று வந்தார். கல்லூரியில் சதுர்ஷினியை சந்தித்து பேச முகேஷ் சென்றபோதும் அவரிடம் சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே சதுர்ஷினி, முகேசை சட்டப்படி விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளாராம் இதை அறிந்த முகேஷ் சதுர்ஷினியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக கேட்டரிங் பணியின் போது இறைச்சி அறுக்க பயன்படுத்தப்படும் பெரிய கத்தியையும், சுத்தியல் ஒன்றையும் எடுத்துக்கொண்டு வியாழக்கிழமையன்று மாலை சதுர்ஷினி வீட்டுக்கு முகேஷ் சென்றுள்ளார்.

அங்கு அவரும் தம்பியும் மட்டும் தனியாக இருந்தனர். பின்னர் முகேஷ் படுக்கை அறையில் இருந்த சதுர்ஷினியை சராமாரியாக கத்தியால் அறுத்தார். கழுத்து, தலை, நெற்றி உள்பட 8க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் அறுக்கப்பட்டதால் சம்பவ இடத்திலேயே சதுர்ஷினி பரிதாபமாக இறந்தார்.

இதை பார்த்த அவரது தம்பி யுஜேஸ்குமார் முகேசை தடுக்க முயன்றார். அப்போது அவனது தலையில் சுத்தியலால் அடித்தும், கத்தியால் அறுத்தும் கொலை செய்த முகேஷ், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேலும் காதலித்து திருமணம் செய்து விட்டு பெற்றோர் பேச்சை கேட்டு என்னை புறக்கணித்ததால் ஆத்திரத்தில் சதுர்ஷினியை கொலை செய்ததாக பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் முகேஷ் கூறியுள்ளார்.