வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் விளையாட்டு நிகழ்வு இன்று (02.03.2017) காலை 9 மணிக்கு தமிழ் மத்திய மகாவித்திலாய பாடசாலையின் அதிபர் த.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு கல்வி வலய பொறியியலாளர் எஸ்.மயூரன், மற்றும் ஆரம்பப்பரிவு பாடசாலையின் அதிபர் எஸ்.ஸ்ரீறங்கநாதன், பழைய மாணவர்கள் சங்க செயலாளர் எஸ்.சுஜன், பொருளாளர் ஆ.அம்பிகைபாகன், ஆகியோர் கலந்து கொண்டதுடன் ஆரம்பப்ரிவு மாணவர்களின் விளையாட்டு செயற்பாடுகள் இடம்பெற்று மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.