தனது மகள் ஆலியா பட் மற்றும் மனைவியை சுட்டுக் கொன்றுவிடுவதாக தனக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடப்பட்டதாக பிரபல பொலிவுட் இயக்குநர் மகேஷ் பட் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
50 இலட்சம் ரூபா பணத்தை லக்னோவில் உள்ள வங்கியில் வைப்பீடு செய்யாவிட்டால் அவர்களைக் கொலை செய்து விடுவதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டியதாக தனது முறைப்பாட்டில் மகேஷ் பட் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மகேஷ் பட் குடும்பத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.






