
கொழும்பு கொம்பனித்தெரு பிரதேசத்தில் உள்ள லொண்டரிவத்தை பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் இரண்டாவது கணவரே இந்த குற்றத்தை புரிந்துள்ளார். சந்தேக நபர் தூக்க மாத்திரையை கொடுத்து நீண்டகாலமாக சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாக நீதிமன்ற மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபர் புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.





