கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக வெள்ளைவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அவசரமாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவ்வாறு உயிரிழந்தவர் தொடர்பில் தகவல்கள் என்னும் கிடைக்கவில்லை என தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






