சந்திரிக்காவின் சாதனையை முறியடித்த தயாசிறி ஜயசேகர!!

538

dayasiri-main

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வடமேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட தயாசிறி ஜயசேகர அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் சாதனையை முறியடித்துள்ளார்.

இதுவரை மாகாணசபைத் தேர்தலில் அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர் என்ற சாதனையை சந்திரிக்கா பண்டாரநாயக்க நிலைநாட்டியிருந்தார். 1993ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி நடைபெற்ற மேல் மாகாணசபைத் தேர்தலில் சந்திரிக்கா 298 000 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.

எனினும், இந்த சாதனை இம்முறை வடமேல் மாகாணசபைத் தேர்தலின் போது முறியடிக்கப்பட்டுள்ளது.

தயாசிறி ஜயசேகர இம்முறைத் தேர்தலில் 336 000 ற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தயாசிறி ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்து இம்முறை மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.