இந்திய தொழிலதிபரிடம் பண மோசடி செய்த இலங்கை நடிகை!!

408

இந்திய தொழிலதிபர் ஒருவரின் பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை நடிகை அக்ஷா சுதாரியிற்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கொழும்பு மேலதிக நீதவான், ஜெயராம் ட்ரொட்ஸ்கி இந்த உத்தரவை நேற்றைய தினம் பிறப்பித்துள்ளார்.இந்த வழக்கு மீண்டும் ஜூன் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இந்திய தொழிலதிபர் கடந்த 2015 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.