வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்து குழந்தை பலி!!

616

 
வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் இன்று (08.03.2017 மதியம் 12.30 மணியளவில் பாதுகாப்பற்ற கிணற்றினுள் வீழ்ந்து ரவீந்திரன் பிரவீனன் என்ற ஒன்றரை வயது குழந்தை இறந்துள்ளது. மேலும் இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் ,

இவரது தந்தையார் கொழும்பில் பணிபுரிந்து வருகின்றார். தாயார் வவுனியாவிற்கு சென்றிருந்து வேளை குறித்த குழந்தை தாத்தாவின் அரவணைப்பில் இருந்துள்ளார்.

தாத்தா குறித்த குழந்தையினை வீட்டினுள் விட்டுவிட்டு வீட்டுக்கு அருகே காணப்படும் காணியில் ஆட்டினை கட்டி விட்டு வருவதற்காக சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் தாத்தாவை தேடிச் சென்ற குறித்த குழந்தை (ரவீந்திரன் பிரவீனன்) வீட்டிக்கு அருகே காணப்படும் பாதுகாப்பற்ற கிணற்றினுள் வீழ்ந்துள்ளார்.

ஆட்டினை கட்டி விட்டு வீடு திரும்பிய தாத்தா குழந்தையினை தேடிய போது குழந்தை கிடைக்கவில்லை . குறித்த குழந்தையின் சகோதரன் ( வயது 3) கிணற்றிற்கு அருகே சென்ற பொழுது கிணற்றினுள் குழந்தை இருந்ததை அறிந்து உடனே தாத்தாவிற்கு தெரிவித்துள்ளார்.

கிணற்றினுள் குதித்து தாத்தா குழந்தையினை மீட்டெடுத்து வவுனியா பொது வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில் அனுமதித்துள்ளார்.

தற்போது சடலம் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.