வவுனியாவில் வன்னி மாவட்டங்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் பனிமனை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சமாதான விகாரைக்கு அருகாமையில் இன்று (08.03.2017) பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டது.
இந்நிகழ்வானது இன்று காலை வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நடைபெற்றது.
சிவசிறி நித்தியானந்த தேவராஜ குருக்களால் பிள்ளையார் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சோமரத்தன விஜியமுனி, வடக்கு மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த (06.03.2017) அன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சமாதான விகாரை பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜெயசுந்தர தலைமையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



















