வவுனியாவில் தேவாலயத்தில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு!!

630

 
வவுனியா ஓமந்தை பிரதான வீதியிலுள்ள வேளாங்கன்னி தேவாலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தேவாலயத்தின் உண்டியல் ஏற்கனவே இரண்டு தடவைகள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.