1 கோடியால் பாதுகாப்பில்லாமல் வந்த சச்சின், டிராவிட்!!

532

sachi

சம்பியன்ஸ் லீக் T20 இன்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் & மும்பை அணிகள் மோதின. இந்த மைதானத்தில் மொத்தம் 7 ஆட்டங்கள் நடக்கிறது.

இந்நிலையில் போட்டி நடைபெறும் நாட்களிலும் வீரர்கள் பயிற்சி பெறும் போதும் பொலிஸ் பாதுகாப்பு அளிப்பதற்காக 1 கோடி சம்பளமாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்திடம் கேட்கப்பட்டுள்ளது. இதை கேட்டு ஷாக் ஆன ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் அவ்வளவு தொகையை கொடுக்க முடியாது என்று கைவிரித்தது.

இதன் விளைவு நேற்று ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு பஸ்சில் பயிற்சிக்கு வந்த மும்பை, ராஜஸ்தான் வீரர்களுக்கு பொலிசார் பாதுகாப்பு அளிக்கவில்லை. மேலும் மைதானத்திலும் ஒரு பொலிசார் கூட பணியில் ஈடுபடவில்லை. பொலிசார் பாதுகாப்பு இல்லாமல் வீரர்களின் பஸ் வந்ததால் ஆங்காங்கே டிராபிக்கில் சிக்கியது.

இந்த சமயத்தில் வாகனங்களில் சென்ற சில ரசிகர்கள் பஸ்சில் ஏறி வீரர்களுடன் புகைப்படம் எடுத்தனர். இதையடுத்து இந்த விவகாரம் சர்ச்சையானது. தொடர்ந்து மாநில அரசுடன், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதன் பின்னர் பாதுகாப்பு கொடுக்க பொலிசார் சம்மதம் தெரிவித்தனர். நேற்றிரவு முதல் ஹோட்டல், மைதான பகுதிகளில் பொலிசார் குவிக்கப்பட்டனர்.