வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் மேற்கொள்ளப்படும் சுழற்ச்சி முறையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று (11.03.2017) ஜனநாயக மாக்சசிச லெனினிசக் கட்சி ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்திற்கு முன்பாக ஆரம்பமாகி கண்டி வீதிவழியாக, மணிக்கூட்டக்கோபுர ஊடாக பசார் வீதி, இலுப்பையடி, நீதிமன்ற வீதியூடாக காணாமற்போன உறவினர்கள் மேற்கொண்டு வரும் உணவு தவிர்ப்பு இடத்திற்குச் சென்று தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.
இதில் கலந்து கொண்டவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை உடனே நிறுத்து, அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறு, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேட உனக்கு எத்தனை ஆண்டுகள் தேவை? போன்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளுடன் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.















































