இலங்கையில் இருந்து தங்கம் கடத்திய மூவர் இந்தியா- திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மதியம், 2.30 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏயாலைன்ஸ் விமானம் மூலம் இவர்கள் திருச்சி சென்றுள்ளனர்.
திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகளிடம் சோதனை நடத்தினர்.
அதில் சந்தேகப்படும் வகையில் நடமாடிய மூவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இவர்கள் ஒவ்வொருவரும் தலா 600 கிராம் தங்கத்தை ஆசனவாயில் வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சுங்கத்துறையினர் மொத்தம் 1,800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.





