தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கீகாரத்தை பெற்றுள்ளது, முஸ்லிம் காங்கிரஸிற்கான ஆதரவு வீழ்ச்சியடையவில்லை : ரவூப் ஹக்கீம்!!

557

hakeem

மாகாண சபை தேர்தலில் தமது கொள்கைக்கான அங்கீகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது. எனவே அந்த கூட்டமைப்புக்கு தாம் வாழ்த்து தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

முதல் தடவையாக வடக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு ஆசனம் ஒன்று கிடைத்துள்ளது. இதன்மூலம் முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காக போராட வழியேற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நியாயமானதாக இடம்பெற்ற போதும் தேர்தல் பிரசாரங்களின் போது அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்..

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கான ஆதரவு வீழ்ச்சியடையவில்லை.
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் வழங்கியுள்ள அதிகாரத்தை அரசாங்கம் மதிக்க வேண்டும். வடக்கு அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றியை ஓர் சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

வழமை போன்று தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மக்கள் வழங்கிய ஆதரவு பாராட்டுக்குரியது. கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மற்றும் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.