வவுனியாவில் சர்வதேச மகளிர்தின நிகழ்வுகள்!!

915

 
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வவுனியா நகசபை மண்டபத்தில் இன்று (13.03.2017) காலை 10 மணியளவில் வடகிழக்கு பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு ஏற்பாடு செய்த மாற்றத்திற்காகத் துணிவோம் எனும் தொனிப் பொருளில் சர்வதேச மகளிர் தினம் இடம்பெற்றது.

பெண்கள் எதிர் நோக்கும் சவால்கள், பெண்கள் அமைப்பினர் ஒன்றிணைந்து நீதி கேட்கும் போராட்டம், வடகிழக்கில் பெண்கள் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களின் மீள் பார்வை, அதன் பலாபலன்கள் என்பன தொடர்பான கலந்துரையாடல், கலை நிகழ்வுகள் என்பன பிற்பகல் 4மணிவரையும் இடம்பெற்றதுடன் நிகழ்வில் ஒரு அங்கமாக ஜனாதிபதி, பிரதமருக்கு கையெழுத்து வேட்டையும் இன்றைய மகளிர் தினத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.