நடைபெற்ற தேர்தலில் 3 மாகாணங்களிலும் 170 000 வாக்குகள் நிராகரிப்பு!!

467

ele

வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 615 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அளிக்கபட்ட வாக்குகளில் கண்டி மாவட்டத்திலும் வட மாகாணத்திலும் கூடுதலான 7.25 வீதம் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி தேர்தல் நடைபெற்ற 10 மாவட்டங்களிலும் 4459 தபால் மூல வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இம்முறை தேர்தலில் 43 58 263 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றிருந்ததோடு 28 73 182 பேரே வாக்களித்திருந்தனர்.

இதிலும் வட மேல் மாகாணத்தில் 53 215 வாக்குகளும் (4.77%) , மத்திய மாகாணத்தில் 82 162 (6.46%) வாக்குகளும் , வடக்கில் 35 239 (7.29%) வாக்குகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.