எஜ­மா­னர்­களால் கொடுமை : பாழ­டைந்த வீட்டில் இரு வாரங்களாக தங்­கி­யி­ருந்த பெண் உண­வின்றி உயி­ரி­ழந்தார்!!

615

பணிப்­பெண்­ணாக மத்­திய கிழக்கு நாடொன்­றுக்குச் சென்ற 22 வயது யுவதி ஒருவர் தாம் கட­மை­யாற்­றிய வீட்டின் உரி­மை­யா­ளர்­களால் கொடு­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தனை தாங்க முடி­யாமல் அந்த வீட்­டி­லி­ருந்து தப்பிச் சென்று அப்­பி­ர­தே­சத்தில் தனி­யா­க­விருந்த பாழ­டைந்த வீடு ஒன்­றுக்குள் இரண்டு வாரங்கள் எது­வித உண­வு­மின்றி உயி­ரி­ழந்த சம்­ப­வ­மொன்று குறித்த தகவல் நீர்­கொ­ழும்பு திடீர் மரண விசா­ரணை அதி­காரி டாக்டர் கீர்த்தி சிரி­ஜ­யந்த முன்­னி­லையில் நடை­பெற்ற மரண விசா­ர­ணையில் தெரிய வந்­துள்­ளது.

பழைய மஸ்­கெ­லி­யாவைச் சேர்ந்த கருப்­பையா தர்­ஷனி என்ற யுவ­தியே இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வ­ராவார். இந்த யுவதி இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் பணிப்­பெண்­ணாக குவைத்­துக்குச் சென்­றுள்ளார்.
இவர் குவைத்­தி­லுள்ள வீட்­டுக்குச் சென்ற நாள் முதல் வீட்டு உரி­மை­யா­ளர்­களால் கொடு­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

இந்த யுவதி தன்னை எப்­ப­டி­யா­வது மீண்டும் இலங்­கைக்கு அழைத்துக் கொள்­ளும்­படி தனது வீட்­டா­ருக்கும் இலங்கை தூத­ர­கத்­துக்கும் பல­முறை அறி­வித்தும் எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்­லை­யென மரண விசா­ர­ணை­யின்­போது தெரி­ய­வந்­துள்­ளது.

பின்னர் ர­க­சி­ய­மாக வீட்டை விட்டு வெளி­யே­றிய இந்த யுவதி அதே பிர­தே­சத்தில் கைவி­டப்­பட்ட வீடொன்றில் மறைந்­தி­ருந்­துள்ளார்.

சுமார் இரண்டு வாரங்கள் உணவோ தண்­ணீரோ இல்­லாத நிலையில் இந்த யுவதி பட்டினியால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இம் மரணம் தொடர்பாக மரண விசாரணை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி பகிரங்க தீர்ப்பளித்தார்.