கணவனைக் கொன்று சடலத்தை சூட்கேசில் மறைத்து வைத்த மனைவி : அதிர்ச்சி சம்பவம்!!

501

இந்தியாவில் கணவனை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் மறைத்து வைத்திருந்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலியை சேர்ந்தவர் Ekam Singh Dhillon (40) இவர் மனைவி Seerat Kaur. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Ekam Singh செய்து வந்த தொழில் சில மாதங்களாக கடும் சரிவை சந்தித்துள்ளது. இதை புரிந்து கொள்ளாத அவர் மனைவி Seerat கணவனிடம் அதிகம் பணம் சம்பாதியுங்கள்.

மேலும், சமூகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என நச்சரித்துள்ளார். இது சம்மந்தமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்ப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் சண்டை அதிகமாக தான் வைத்திருந்த துப்பாக்கியால் கணவனை Seerat சுட்டு கொன்றுள்ளார்.

பின்னர் இது குறித்து தன் தாய் மற்றும் இரு சகோதரர்களுக்கு Seerat தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் வந்த பின்னர் Ekam Singh சடலத்தை சூட்கேசில் அடைத்து வீட்டிலிருந்து அவர்கள் வெளியில் எடுத்து வந்துள்ளனர்.

சூட்கேசிலிருந்து இரத்தம் வருவதை பார்த்த ஒருவர் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார். ஆனால், உஷாரான Seerat மற்றும் அவர் குடும்பத்தினர் பொலிஸ் வருவதற்குள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.