இலங்கையில் கடலில் உருவாகும் பிரம்மாண்டமான நகரத்தால் இலங்கை வரைபடத்தில் மாற்றம்?

735

இலங்கையின் வரைபடத்தில் விரைவில் மாற்றம் ஏற்படும் என அளவீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலிமுகத்திடலில் உருவாகும் துறைமுக நகரத்தை நிர்மாணித்த பின்னர் குறித்த மாற்றம் ஏற்படவுள்ளதாக அளவீட்டுத் திணைக்களத்தின் அதிபதி பீ.எம்.பீ. உதயகாந்த குறிப்பிட்டார்.

இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

துறைமுக நகர நிர்மாணத்தினால் நாட்டின் கரையோரத்தில் மாற்றம் ஏற்படுவதாகவும், இதன் காரணமாக இலங்கை வரைபடத்தை மறுசீரமைக்கும் தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.