நடிகைகள் நயன்தாராவும், ஸ்ரேயாவும் சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்து திரையுலகினரை ஆத்திரமூட்டியுள்ளது.
இவ்விழாவில் நடிகர் நடிகைகள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், நடிகர் சங்கமும் அறிவுறுத்தி இருந்தன. விழாவை சிறப்பாக கொண்டாட ஒரு வாரம் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது.
நடிகர், நடிகைகள் சென்னையில் முகாமிட்டு பல நாட்கள் நடன ஒத்திகை எடுத்து மேடையில் ஆடினார்கள். இதனை இயக்குனர்கள் பொறுப்பேற்று நடத்தினர்.
ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா, கார்த்தி, தனுஷ், பரத், ஜீவா, திரிஷா, ஹன்சிகா, காஜல் அகர்வால், லட்சுமிராய் என முன்னணி நட்சத்திரங்கள் விழாவுக்கு வந்திருந்தனர். பலர் நடனமும் ஆடினார்கள்.
ஆனால் நயன்தாராவும், ஸ்ரேயாவும் விழாவுக்கு வரவில்லை. இருவரும் தமிழில் நிறைய படங்கள் நடித்துள்ளனர். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்கள்.
தமிழ்பட விழாவுக்கு வராமல் போனதும் தெலுங்கு படக்குழுவினருடன் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த விழாவிலும் கலந்து கொள்ளவில்லை.
நயன்தாரா, ஸ்ரேயா என நூற்றாண்டு விழாவில் பங்கேற்காத நடிகர், நடிகைகள் பட்டியல் தயாராகி வருவதாகவும் அவர்களுக்கு தனித்தனியே நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரையுலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.